For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்தவர் உயிருடன் எரித்துக் கொலை

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாகக் கூறி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சீட்டா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வழிப்போக்கர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு தங்கியுள்ளார். மறுநாள் காலையில் அங்கு குர்ஆன் எரித்ததுக் கிடந்துள்ளது. இதைப் பார்த்த கிராமத்தினர் அந்த நபரை அடித்து நொறுக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் 200 பேர் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அந்த நபரை இழுத்து வந்து அவரை உயிருடன் எரித்துக் கொன்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 30 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் கவனக்குறைவாக இருந்த 7 போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மௌலவி மேமன் கூறுகையில்,

வியாழக்கிழமை இரவு அந்த வழிப்போக்கர் மட்டும் தான் பள்ளிவாசலில் தங்கியிருந்தார். அதனால் அவரைத் தவிர வேறு யாரும் இந்த கொடூரச் செயலைச செய்திருக்க முடியாது என்றார்.

English summary
A man was burnt alive by a gang of 200 people accusing him of burning the quran. Police arrested 30 persons in connection with this brutal murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X