சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்தியர்கள் உள்பட 22 பேர் மீட்பு

Subscribe to Oneindia Tamil

மொகதிஷு: கடந்த 2009ம் ஆண்டு ஏமன் கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் உள்பட 22 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் துபாய் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான எம்.வி. ஐஸ்பர்க் 1 என்ற கப்பல் பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் ஏடன் வளைகுடாவில் சென்றபோது சோமாலிய கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை தாக்கி அதில் இருந்த 22 ஊழியர்களை பிணையக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

பிடித்துச் செல்லப்பட்ட ஊழியர்கள் கானா, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து கானா, இந்தியா, பாகிஸ்தான், பிலி்ப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாட்டு கடற்படையினர் சோமாலியாவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சோமாலியாவின் பண்ட்லேண்ட் என்ற பகுதியில் கடற்கொள்ளையர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையே கடந்த 2 வாரங்களாக தீவிர சண்டை நடந்தது. இறுதியில் கப்பல் கடற்படையினரின் வசம் வந்தது. அதில் இருந்த 22 பேரும் 2 ஆண்டுகள் 9 மாதங்கள் கழித்து மீட்கப்பட்டனர்.

அந்த 22 பேரையும் கடற்கொள்ளையர்கள் துன்புறுத்தியற்கான அடையாளங்கள் அவர்களின் உடலில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+