பிரதமரின் டிவி உரை- தாமதமாகப் போன டிடி பணியாளர்கள்! 5 பேர் சஸ்பென்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பலாத்கார சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து அமைதி காக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியதை பதிவு செய்ய தாமதமாக சென்ற டிடி பணியாளர்கள் 5 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பலாத்கார சம்பவத்துக்கு நீதி கோரி டெல்லியை ஒரு வார காலமாக போர்க்களமாக்கியிருந்தனர் மாணவர்கள். இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று உரையாற்றினார்.

பிரதமரின் இந்த உரையை பதிவு செய்வதற்காக அரசு நிறுவனமான தூர்தர்ஷன் சார்பில் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் கேமிராமேன்கள் காலை 9.30மணிக்கு பதிலாக 9.40க்கு சென்றடைந்திருக்கின்றனர். டெக்னிக்கல் பணியாளர்களோ 9.50க்கு போய் சேர்ந்திருக்கின்றனர்.

வேறுவழியில்லான ஏஜென்சி நிறுவனமான ஏ.என்.ஐ. பதிவு செய்திருந்ததை வாங்கி ஒளிபரப்பி இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக தாங்கள் தாமதமாக செல்ல நேரிட்டது என்று கூறியிருக்கின்றனர். ஆனால் தூர்தர்சன் நிர்வாகம் இதனை நிராகரித்து 2 கேமிராமேன்களையும் 3 இதர பணியாளர்களையும் சஸ்பென்ட் செய்திருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+