டெல்லி சட்டம்- ஒழுங்கு: உள்துறை செயலர், போலீஸ் கமிஷனருக்கு பார்லி. நிலைக் குழு சம்மன்

Subscribe to Oneindia Tamil

Delhi
டெல்லி: டெல்லியில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகரின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உள்துறை செயலர் ஆர்.கே.சிங் மற்றும் டெல்லி மாநகர போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் ஆகியோருக்கு உள்துறை விவகாரங்களுக்கான பார்லிமெண்ட் நிலைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி சிகிச்சைக்காக நேற்று இரவு சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

இருப்பினும் பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இன்று டெல்லி நிஜாமுதீன் தொடங்கி இந்தியா கேட் வரை பேரணி நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்தியா கேட் பகுதியைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் பேரணி நடைபெற இருக்கிறது. தங்களது பேரணியும் ஆர்ப்பாட்டமும் அமைதியாக நடைபெறும் என்று போராட்டக் குழு உறுதியளித்திருக்கிறது.

இந்நிலையில் போர்க்களமாகிக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லியின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உள்துறை செயலர் ஆர்.கே.சிங் மற்றும் டெல்லி போலீஷ் கமிஷனர் நீரஜ்குமார் ஆகியோருக்கு உள்துறை விவகாரங்களுக்கான பார்லிமெண்ட் நிலைக்குழு சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் ஆராயப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+