இனி எவனாவது வாலாட்ட முடியுமா? - ராமதாஸ் மறுபடியும் பேச்சு!

சேலத்தில் நடந்த அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாடக காதல் திருமணங்களால் பெண்கள் வாழ்க்கை பாதிக்கபடுகிறது பெண்ணியத்துக்கு எதிரானது மனித உரிமைக்கு எதிரானது தமிழ் பண்பாட்டிற்கே எதிரானது தமிழ் பண்பாட்டில் காதலே இல்லை.
(அப்போது செய்தியாளர்கள், அகநானூறு புறநானூறு என்றுதானே தமிழ் இலக்கியங்கள் வாழ்வியலே அமைந்துள்ளன என்று கேட்டபோது அது வேறு என்று பதிலளித்தார் ராமதாஸ். தொடர்ந்து பெரியாரே காதலை எதிர்த்தவர் என்று கூறி கி.வீரமணி எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார்)
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க. வெறும் பி.சி, எம்.பி.சி மக்கள் மட்டுமல்ல, எப்.சி எனும் உயர் சாதியினரும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். பிராமண சங்க தலைவர் நாராயணன் எங்களுக்கு முழு ஆதரவு தரார். அவர் பாணியில் சொல்லனும்னா உங்களுக்கு ஆதரவு தருவது எங்களுக்கு பரிபூரண சம்மதம்.
இந்த நாடக காதல் திருமணங்களால் பிராமணர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் சைடில் பலர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி எவனாவது வாலாட்ட முடியுமா? அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன்ன நிற்போம். காவல்துறை அரசுகிட்ட போவோம் கடத்தி போனவனை இழுத்துவந்து பெண்ணை மீட்ப்போம். ஆனால் நாங்கள் வன்முறை அமைப்பில்லை. வன்முறை கூடாது எனும் அமைப்பு என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications