கிரானைட் தொழில் வேண்டாம் என்று என் தந்தை அப்போதே சொன்னார் - அழகிரி மகன் வாக்குமூலம்

கிராடனைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த துரை தயாநிதி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரிடம் மேலூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முழுவதும் நடந்த இந்த விசாரணையின்போது துரை தயாநிதியிடம், அவர் இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது துரைதயாநிதி கூறுகையில்,
ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் சிறிது காலம் சைலண்ட் பார்ட்னராக இருந்தேன். அதன் பின்னர் அதிலிருந்தும் விலகிவிட்டேன். ஆனால் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் சட்டவிதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் என் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தான் என் மீது போலீசார் போட்டுள்ள முதல் வழக்ககாகும். இது தவிர கிளவுட் நைன் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தினேன். அதில்தான் முழு கவனம் செலுத்தி வந்தேன்.
கிரானைட் தொழிலில் நான் பங்குதாரராக சேர்ந்ததற்கும், எனது தந்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தாயார் காந்தி அழகிரி மற்றும் குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் இந்த தொழிலில் நான் சேர்ந்தபோது எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏதாவது தொழிலை திறம்பட செய் என்று அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் நான் சிறிது காலம் கிரானைட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வந்தேன்.
நான் இருந்த காலத்தில் அந்த நிறுவனத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளாராம் துரை தயாநிதி.
அவரது வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்றும் போலீஸ் தரப்பில் துரை தயாநிதியிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications