50 எம்.எல்.ஏக்கள் 'ஆன் தி வே'... எதியூரப்பா தகவல்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து குல்பர்காவில் செய்தியாளர்களிட்ம் அவர் பேசுகையில், எனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்கள் எனது சிக்னலுக்காக காத்துள்ளனர். நான் சம்மதம் தெரிவித்ததும் அவர்கள் பாஜகவை விட்டு விலகுவார்கள், அரசு கவிழும். அதன்பின்னர் அவர்கள் எனது கட்சியில் இணைவார்கள். விரைவில் 50 பேர் கட்சியில் இணைவார்கள்.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு நான் இப்போதே தயாராகி வருகிறேன். விரைவில் 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யவுள்ளேன். பெயர்களையும் அறிவிப்பேன். ஜனவரி இறுதிக்குள் 100 பேருக்கும் மேலான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடுவர் என்றார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications