சவ ஊர்வலத்தில் திடீர் மோதல்-பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

களக்காடு: களக்காடு அருகே சவ ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்.

திருக்குருங்குடி தென்கரையை சேர்ந்தவர் இசக்கியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து உடலை தகனம் செய்வதற்காக அவரது உறவினர்கள் நம்பிதலைவன்பட்டயம் சுடுகாட்டிற்கு மேள,தாளத்துடன் ஊர்வலமாக எடு்த்து சென்றனர். அங்குள்ள கோயில் அருகே சென்றபோது ஊர்வலத்தில் வந்தவர்கள் மேளம் அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது கோயிலில் இருந்து நம்பிதேவன்பட்டணத்தை சேர்ந்த சிலர் கோயில் அருகே சவமேளம் அடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்கரையை சேர்ந்தவர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தினர்.

பின்னர் அவர்கள் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருக்குருங்குடி போலீசில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து இரு கிராம மக்கள் சாமாதான கூட்டம் நாங்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் ஏர்வாடி போலீஸ ஸ்டேஷனில் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+