இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் பரிமாற்றம்
Subscribe to Oneindia Tamil

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கும் இருதரப்பு ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அவ்வப்போது தாங்கள் அமைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 21 முறை இப்படியான தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 22-வது முறையாக உரிய தொடர்புகள் மூலம் இருநாடுகளும் மீண்டும் அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications