பெண்கள் பற்றிய கருத்தை மதுரை ஆதீனம் திரும்பப் பெற மாதர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: பெண்கள் பற்றிய கருத்தை மதுரை ஆதீனம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மாதர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துள்ளார். இச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இன்றைக்கு இருக்கும் தண்டனை சட்டம் பெண்களுக்கு பாதுகாப் பானதாக இல்லை. எனவே, மத்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றவாளிக்கு அதிகபட்சமாக தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் பெண்கள் ஆடை அணிவது குறித்து கூறிய கருத்தை உடனடி யாக திரும்ப பெறவேண்டும். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தங்களுக்கான ஜனநாயக பூர்வமான முடிவுகளை எடுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. ஒரு சில சாதிய அமைப்புகளின் தலைவர்கள் என்று தங்களை கூறிகொள்ளும் ராமதாஸ் போன்றவர்கள் பெண்கள் குறித்து பேசும் கருத்து சரியில்லை.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காரைக்காலை சேர்ந்த இளம் பெண் வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடனே மருத்துவ சிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும். இதில் சம்பந்தபட்டுள்ள குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டணை வழங்க காவல்துறை செயல்பட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications