புத்தாண்டு பார்ட்டியில் பயங்கரம்: 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 2 பேர்

டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மருத்துவ படிப்பு மாணவியின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தெற்கு டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு போதைப் பொருள் கொடுத்து இரண்டு பேர் கற்பழித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். அந்த இருவரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி புரிந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சரோஜினி நகரில் வசித்து வருகின்றனர். ஒருவர் ஐடி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்துள்ளார். மேலும் மற்றொருவர் ஹெச்.ஆர். துறையில் பணிபுரிந்துள்ளார்.
இந்த இருவரில் ஒருவர் சமூகவலைத்தளம் மூலம் அந்த மாணவியுடன் நட்பு பாராட்டியதுடன் அவரை சந்திக்க வேண்டும் என்று பலமுறை தெரிவித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications