For Daily Alerts
Just In
நாளை முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழை- வானிலை மையம்
வட கிழக்குப் பருவ மழை முடிந்து விட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்யும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கு குளிர்கால மழை என்றும் வானிலை மையம் பெயரிட்டுள்ளது.
இந்த மழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில், இலங்கையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வியாழக்கிழமை முதல் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். தொடர்ந்து அந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.அதுவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றார் அவர்.
Comments
English summary
Weather office has said that southern districts may expect good rain from tomorrow due to a low pressure in Bay of Bengal.