அதிமுக பொதுக்குழுவுக்கு நிருபர்களை அழைத்துச் சென்ற தலைமைச் செயலக பி.ஆர்.ஓ.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நிருபர்களை தலைமைச் செயலக பி.ஆர்.ஓ. அழைத்துச் சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்னையில் உள்ள நாளிதழ், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் மிகவும் ஆர்வமாக சென்றனர். ஆனால் அவர்கள் கூட்ட அரங்கிற்குள் செல்ல பாஸ் வழங்கப்படவில்லையாம். இந்நிலையில் தலைமைச் செயலக பி.ஆர்.ஓ.வாக உள்ள ராஜா என்பவரது தலைமையில் சென்ற செய்தியாளர்களையும், போட்டோகிராபர்களையும் கூட்ட அரங்கிற்குள் அனுமதித்தார்களாம்.
அரசாங்க அதிகாரிகள் தனியார் கட்சி நிகழச்சிகளில் கலந்து கொள்ளலாமா என எதிர்க்கட்சி பத்திரிக்கை நிருபர்கள் எல்லாம் குரல் எழுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.