டீசல் விலை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் விட அரசு பரிசீலனை!

அதேபோல, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை குறைப்பது பற்றி சிபாரிசு செய்வதற்காக, விஜய் கேல்கர் கமிட்டியை மத்திய நிதி அமைச்சகம் அமைத்தது.
இந்த கமிட்டி, கடந்த செப்டம்பர் மாதம் தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.அதில், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், மண்எண்ணெய் விலையை 2 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை 50 ரூபாயும் உடனடியாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.
2014-2015-ம் நிதி ஆண்டு தொடங்குவதற்குள், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கி, அதன் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.
மேலும், சமையல் எரிவாயு, மண்எண்ணெய் ஆகியவற்றுக்கான மானிய சுமையை தாங்கக்கூடிய அளவுக்கு வைத்திருக்கும் வகையில், அப்பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்த வேண்டும் என்றும் சிபாரிசு செய்தது.
பரிசீலனையில்...
இந்த சிபாரிசுகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்போது பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி கூறுகையில், "டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்பது விஜய் கேல்கர் கமிட்டியின் யோசனை. அந்த யோசனையை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுபோல், வீடுகளுக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6 -ல் இருந்து 9 ஆக உயர்த்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறோம்," என்றார்.
பட்ஜெட்டுக்குள் இந்த கேல்கர் கமிட்டி பரிந்துரைகளை மத்திய அரசு அமலுக்குக் கொண்டுவரும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் டீசல், மண்ணெண்ணெய், சமையலஸ் எரிவாயு விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளது என பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போதைய நிலையில், டீசல் விலை ரூ 10.16, மண்ணெண்ணெய் ரூ 32, சமையல் எரிவாயு ரூ 490 நடஷ்டத்தில் விற்பனை செய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications