தற்கொலை பாயிண்ட்டாக உருவெடுக்கும் சென்னை கோட்டூர்புரம் பாலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்ன்னை கோட்டூர்புரம் அடையாறு பாலம்தான் இப்போது சென்னைவாசிகளின் தற்கொலை பாயிண்ட்டாக உருவாகியிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி பிரபல பாடகி நித்தியஸ்ரீயின் கணவர் மகாதேவன் கோட்டூர்புரம் அடையாறு ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சென்னைவாசிகள் தற்கொலை செய்ய இதே கோட்டூர்புரம் பாலத்தையே தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் கடந்த வியாழக்கிழமையன்று சாப்ட்வேர் என்ஜினியர் ரமேஷ் என்பவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 2009-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் படகு மூலம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் வேளச்சேரியைச் சேர்ந்த வினோதகுமார் என்பவர் நள்ளிரவில் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். அவரது அந்த வழியாக சென்றோர் காப்பாற்றியுள்ளனர்.

மேலும் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கோதண்டராம் என்பவர் அண்மைக்கால பலாத்கார சம்பவங்களால் மனமுடைந்த தாம் தற்கொலை செய்யப் போவதாக கூறி நேற்று கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதிக்க முயற்சித்திருக்கிறார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் குடிபோதையில் அப்படி செய்தது தெரியவந்துள்ளது.

இப்படி சென்னைவாசிகளின் தற்கொலை பாயிண்ட்டாக சென்னை கோட்டூர்புரம் பாலம் உருவெடுத்திருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+