கருணாநிதி அறிவிப்பு- அறிவாலயத்தில் அளவில்லா மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது வழக்கம்போலவே ஸ்டாலின் இருந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஸ்டாலின் விவகாரம் எழுப்பப்பட்ட போது அவற்றை உன்னிப்பாக கவனித்து வந்தார்.
செய்தியாளர்கள் அரங்கில் அப்போது நான் சமுதாயப் பணியில்தான் மு.க.ஸ்டாலினை தமக்கு அடுத்ததாக இருக்கிறேன் என்று கருணாநிதி சொன்னபோது ஒருவித நிசப்தம் இருந்தது. ஸ்டாலினும் அமைதியாக இருந்தார்.
பின்னர் வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று அறிவித்தபோது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.
செய்தியாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதும் இப்போதைக்கு எதுவும் நான் பேசவில்லை.. கட்சிப் பணிகள் இருக்கின்றன என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால் தமதுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பதையே பார்க்க முடிந்தது.
கருணாநிதியின் அறிவிப்பால் தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications