ஜார்க்கண்ட்டில் மிகப் பெரும் தேடுதல் நடவடிக்கை- 10 படையினர் பலி- 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்!
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேஹர் மாவட்ட வனப்பகுதியில் நேற்று காலை 10.30 மணிக்கு மாவோயிஸ்டுகளுக்கும் ரிசர்வ் படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. 200க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் மிகப் பெரிய தேடுதல் நடாடிக்கையை 'அனகோண்டா-2" என்ற பெயரில் நேற்ற் தொடங்கினர். அப்போது படையினர் மீது 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பெரும் பதில் தாக்குதலை நடத்தினர். இருதரப்பினரிடையே பல மணி நேரம் மோதல் நீடித்தது.
பின்னர் இரவு 8 மணியளவில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 10 படையினர் பலியாகினர். 2 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதே லடேஹர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 24 படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.2013-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மிகப் பெரும் முதலாவது நடவடிக்கை இது.












Click it and Unblock the Notifications