தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு- மாயன் காலண்டரை வைத்து விஷமிகள் சேட்டை?

மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் இன்று காலை 7.50க்கு புதுச்சேரி வந்தடைந்தது. பின்னர் காலை 8.30க்கு ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கடைசிப் பெட்டியில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு சூட்கேஸை பணியாளர் ஒருவர் திறந்து பார்த்துள்ளார். அதில், வெடிகுண்டு பொருள்கள் இருந்தது தெரியவந்தது. உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அந்த சூட்கேஸின் மேல்பகுதியில் மாயன் காலண்டர் - மாயன் தங்கம் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சூட்கேஸுக்குள் செல்போன் ஒன்றுடன் இணைக்கப்பட்ட நிலையில் வயர்கள், இண்டிகேட்டர் இருந்தன..வெடிக்கும் வாய்ப்பு இருந்தால் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாயன் காலண்டரை வைத்து உலகம் அழியப் போகிறது என்று பீதியைக் கிளப்பியது போல் பரபரப்பை உருவாக்க விஷமிகள் செய்த வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதே நேரத்தில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது ரயில்வே பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications