குரானை மனப்பாடம் செய்யாததால் 7 வயது மகனை அடித்துக் கொன்ற இந்திய அம்மாவுக்கு 17 ஆண்டு சிறை!

இந்திய வம்சாவழியை சேர்ந்த யூசுப் எகே என்பவர், லண்டன் நகரில் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகின்றார். இவர், தன் மனைவி, குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகின்றார். கடந்த 2010-ம் ஆண்டு, ஜுலை மாதம் இவரது மனைவி சாரா (33), தனது 7 வயது மகன் குர்ஆனை விரைவாக மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இறைச்சியை தீய்க்க பயன்படுத்தும் திரவத்தை அந்த சிறுவன் சடலத்தின் மீது ஊற்றி எரித்து, தடயத்தை அழிக்க முயற்சி செய்தார். பிரேத பரிசோதனையின் போது, தீயில் கருகியதற்கு முன்னரே அந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, சாராவிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த தவறை தான் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
லண்டன் நகரில் உள்ள கேர்டிப் கிரவுன் நீதிமன்றத்தில், சாரா மீது போலீசார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் வில்லியம்ஸ், '17 ஆண்டு சிறைதண்டனையை நிறைவுசெய்த பின்னரே குற்றவாளியை பரோலில் விடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications