நாங்கள் தவறு செய்யவில்லை... வழக்கை எதிர்கொள்வோம்: பாலியல் குற்றவாளிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 3 பேர் கூறியுள்ளனர். அவர்களின் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எம்.எல். சர்மா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மூடப்பட்ட நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், அக்சய் தாக்கூர் ஆகிய 3 பேரும், தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகிய 5 பேரும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கு விசாரணையை ரகசியமாக நடத்த நீதிபதி நம்ரிதா அகர்வால் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+