இந்திய வீரர்கள் கொடூரக் கொலை- விளக்கமளிக்க பாகிஸ்தான் தூதருக்கு சம்மன்
டெல்லி: இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் தர பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள்ளே அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர்,இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 13 ஆவது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த கொடூரச் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்
இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயலுக்கு இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் செயல் மனிதாபிமானமற்றது என்று கூறிய அந்தோணி, இதனை கவனமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உணர்ச்சிப்பூர்வமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்த விசயத்தை இரு நாடுகளும் கவனமாக கையாளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications