இந்திய வீரர்கள் கொடூரக் கொலை- விளக்கமளிக்க பாகிஸ்தான் தூதருக்கு சம்மன்
டெல்லி: இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் தர பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மெந்தார் செக்டருக்குள், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள்ளே அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய படையினர்,இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 13 ஆவது ராஜ்புத்தானிய ரைபில்ஸ் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் நைக்ஸ் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் தலையை பாகிஸ்தானிய வீரர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த கொடூரச் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்
இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயலுக்கு இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் செயல் மனிதாபிமானமற்றது என்று கூறிய அந்தோணி, இதனை கவனமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உணர்ச்சிப்பூர்வமானது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்த விசயத்தை இரு நாடுகளும் கவனமாக கையாளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications