மதுரையில் அதிகாலையில் துணிகரம்: கேரள நகை வியாபாரிகளிடம் 4 கிலோ தங்கம் கொள்ளை
மதுரை: மதுரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் கேரளா நகை வியாபாரிகள் வைத்திருந்த 4 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் பகுதியை சேர்ந்த ஜெபுரபேல் (வயது41), வினோத்குமார்(32). ஆகிய 2 பேரும் இன்று காலை 5.30 மணி அளவில் கேரளாவில் இருந்து ஒரு ஆம்னி பஸ்சில் மதுரை வந்தனர். அவர்கள் இருவரும் பெரிய பையில் நகைகளை சுமந்தபடி டி.பி.கே. ரோட்டில் இருந்து தங்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சுண்ணாம்புக்காரத் தெரு பகுதியில் நடந்து சென்ற போது ஆட்டோக்குள் இருந்த 4 பேர் திடீரென ஜெபுரபேல், வினோத்குமார் ஆகியோரின் கண்களிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவர்களை தாக்கினர். இந்த திடீர் தாக்குதலால் ஜெபுரபேல், வினோத்குமார் ஆகிய 2 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்த நகை பைகளை பறித்துக்கொண்டு 4 பேர் கொண்ட கும்பல் ஓடிவிட்டது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த அம்பாசிடர் காரில் 4 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
நகைகளை பறி கொடுத்த 2 பேரும் கதறி அழுதனர். அஅலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடி யாக திரண்டனர். இதுபற்றி திடீர்நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மர்மக் கும்பல் பறித்து சென்ற 2 பைகளில் 4 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. இந்த நகைகள் அனைத்தும் மதுரையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டவை ஆகும். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதொடர்பாக திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகையை பறிகொடுத்த இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக கேரளாவில் இருந்து தங்க நகைகள் செய்து மதுரை நகைக் கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் மதுரை வாணியன்கிணற்று சந்து பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்தும் தங்கி வருகிறார்கள். இவர்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் நபர்கள்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளை சம்பவத்தை அடுத்து மதுரை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை கும்பல் மதுரை நகருக்குள் ஏதாவது ஒரு இடத்தில் பதுங்கி இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இன்று காலையில் நடந்த கொள்ளைச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications