குவைத் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

குவைத் ஏர்வேஸ் KU-344 விமானம், இன்று 216 பயணிகளுடன் சென்னையிலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டது. ஆனால், பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திருப்பினார்.
அடுத்த 45 நிமிடத்தில் அந்த விமானம் சென்னையில் அவரசமாக தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய தொழிலாளர்கள் போராட்டம்-சரக்கு போக்குவரத்து பாதிப்பு:
சென்னை விமான நிலையத்தில் சரக்குப் பிரிவில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்றிரவு பணிக்கு வந்த 120 பேர் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி பணிகளை செய்யாமல் அதிகாரிகளின் அலுவலக வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் விமானத்தில் சரக்கு ஏற்றும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இன்று காலை வரை அவர்களது போராட்டம் விடிய, விடிய நீடித்தது. இதற்கிடையே காலை பணிக்கு வந்த மற்ற தொழிலாளர்களும் கார்கோ விமான நிலைய வாசலில் நின்று போராட்டம் நடத்தினர்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சரக்கு விமான போக்குவரத்து முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் சாமாதான பேச்சு நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications