பிப். 2ல் சென்னையில் மொட்டை போடும் போராட்டம்: மொட்டையடிக்கும் 250 மதுரை ஆசிரியர்கள்
மதுரை: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி சென்னையில் நடக்கும் மொட்டை போடும் போராட்டத்தில் கலந்து கொள்ள மதுரையைச் சேர்ந்த 250 ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 720ல் மாற்றம் செய்ய வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 7 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி சென்னையில் மொட்டை போடும் போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கான ஆயத்தக் கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் சரவண முருகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் மணிவாசன் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மொட்டை போடும் போராட்டத்தில் மதுரையில் இருந்து பங்கேற்கும் ஆசிரியர்களில் 250 பேர் மொட்டை போடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications