பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய வாலிபர் போலீஸ் தேடியதால் தற்கொலை
உளுந்தூர்ப்பேட்டை: கருணைக் கிழங்கு வெட்டச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர், போலீஸார் தன்னைத் தேடி வந்ததைத் தொடர்ந்து தனது அக்காள் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகள், 9 வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்காமல் கருணைக் கிழங்கு வெட்டி எடுக்கும் கூலி வேலைக்குப் போய் வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குப் போனபோது அவரை வழிமறித்து ராஜேஷ் என்ற 24 வயது வாலிபர் பலாத்காரம் செய்து விட்டார். இதுகுறித்து உளுந்தூர்ப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷைத் தேடி வந்தனர்.
ராஜேஷ் தலைமறைவானார். பின்னர் தனது அக்காள் விஜயலட்சுமி வீட்டுக்கு ஓடி விட்டார். போலீஸார் எப்படியும் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சிய அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.












Click it and Unblock the Notifications