காதலனின் மகள் வாயில் மிளகாயப் பொடியைத் திணித்துக் கொன்ற காதலி
Subscribe to Oneindia Tamil

ஆப்பிள் வேலி பகுதியைச் சேர்ந்தவர் அமன்டா சோரென்சென். 21 வயதா இவரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போலீஸாருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர்கள், அமன்டாவின் செயல் குறித்துத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். வீடடிற்கு வந்தபோது குழந்தை வாயில் மிளகாய்ப் பொடி திணிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்து சோரன்சென்னைக் கைது செய்தனர் போலீஸார்.
தனது காதலரின் குழந்தை தான் சொன்னதைக் கேட்காததால் வாயில் மிளகாய்ப் பொடியைத் திணித்துள்ளார் அமென்டா.இதனால்தான் குழந்தைக்கு வலிப்பு வந்து அது உயிரிழந்துள்ளது. தற்போது அமென்டா கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications