பாகிஸ்தான் கொடுத்த புகார் தொடர்பாக ஐ.நா. குழு விசாரணை
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவ கண்காணிப்புக் குழு விசாரணை நடத்த உள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுக்கான ஐ.நா.சபையின் ராணுவ கண்காணிப்புக் குழுவுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில் ஜனவரி 6ம் தேதியன்று இந்திய ராணுவத்தால் தமது ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்து விசாரிக்கப்பட இருக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீ மூனின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெஷிர்கி கூறியுள்ளார்.
இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகக் கோரமாக ஜனவரி 8ம் தேதியன்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இரு நாடுகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications