117 முறை போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. அலட்சியமாக இருக்கும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

Indian Army
சென்னை: 2012ம் ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த உடன்பாட்டை 117 முறை மீறி நடந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியத் தரப்போ இதுகுறித்து பெரிய அளவில் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை.

55 ஆண்டு காலமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது. நாம் சும்மா இருந்தாலும் அவர்கள் இருக்க விடுவதில்லை, சீண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே 3 பெரிய போர்கள் நடந்து விட்டன. கார்கிலில் கடைசியாக நடந்த மோதலை உலகமே பயத்துடன் பார்த்தது. அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மதித்து நடந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான்தான் அதை சுத்தமாக மதிப்பதில்லை.

2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாட்டை இதுவரை பாகிஸதான் மதித்ததே கிடையாது. அன்று முதல் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறியபடியே உள்ளது பாகிஸ்தான். இந்தியாவும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதுமாகவே உள்ளோம்.

எல்லைப் பகுதியில் நாம் எதைச் செய்தாலும் அதற்கு இடையூறு செய்வதே பாகிஸ்தானின் வேலையாகப் போய் விட்டது. கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 117 முறை போர் நிறுத்தத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். சிறு ஆயுதங்களை வைத்து இந்திய வீரர்களை நோக்கிச் சுடுவது அவர்களுக்குப் பொழுதுபோக்கு போலாகி விட்டது.

தற்போது இந்தியப் பகுதிக்குள்ளேயே புகுந்து 2 ராணுவ வீரர்களைக் கோரமான முறையில் பாகிஸ்தான் ராணுவம் கொன்றுள்ள செயல், இந்திய ராணுவத்தினரை கடும் உக்கிரத்தில் தள்ளியுள்ளது. ஆனால் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+