ஆண்டாள் கோவிலுக்கு 105 கிராம் தங்கம் தந்த விஜயகாந்த்.. டென்ஷனாகி ஓடி வந்த 2 அமைச்சர்கள்!

இன்று காலையிலிருந்தே ஆண்டாள் கோவில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. விஜயகாந்த் வரப் போவதாக தகவல் வெளியாகியிருந்ததால் கோவிலுக்கு வெளியே கட்சியனர் திரண்டு நின்றனர். அதிகாலை சரியாக மூன்றே முக்கால் மணியளவில் விஜயகாந்த் மனைவியுடன் வந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்ட விஜயகாந்த், கோவில் விமானம் அமைக்கும் பணிக்காக 105 கிராம் தங்கத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பும் கூட முதலில் இங்கு வந்துதான் சாமி கும்பிட்டு விட்டு்ச சென்றார் விஜயகாந்த். அத்தேர்தலி்ல தேமுதிகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்தது, விஜயகாந்த்தும் எதிர்க்கட்சித் தலைவரானார். அதேபோல தற்போது புதிய கூட்டணிக்காக தேமுதிகவும், விஜயகாந்த்தும் தயாராகி வரும் நிலையில், ஆண்டாளை நாடி விஜயகாந்த் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓடி வந்த அமைச்சர்கள்
இந்த நிலையில்,விஜயகாந்த் வந்து 105 கிராம் தங்கத்தை அன்பளிப்பாக கொடுத்த தகவல் ராஜபாளையத்தில் தங்கியிருந்த அமைச்சர்கள் சிவபதி மற்றும் ராஜேந்திர பாலாஜிக்குப் போனது. கட்சியினர் சென்று அவர்களைச் சந்தித்து, விஜயகாந்த் நமக்கு முன்பாக முந்திக் கொண்டு தங்கத்தை அன்பளிப்பாக வழங்கி விட்டார். இதனால் நாம் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து இரு அமைச்சர்களும் வேகம் வேகமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கிளம்பி வந்தனர். பின்னர் கோவிலுக்கும் சென்றனர்.
இப்படி அடுத்தடுத்து விஜயகாந்த்தும், அமைச்சர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்ததால் காலையிலிருந்தே கோவில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications