கருணாநிதியெல்லாம் 'கேஸே' போட்டதில்லை.. விஜயகாந்த் பெருமிதம்!
Subscribe to Oneindia Tamil
முதல்வராக இருந்த கருணாநிதி எவ்ளோ பெருந்தன்மையாக இருந்தார்...: புகழாரம் சூட்டும் விஜயகாந்த்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த கருணாநிதி எத்தனையோ விமர்சனங்களை ஜெயலலிதா முன்வைத்த போதும் அவதூறு வழக்குகளைப் போடாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
ஸ்ரீஇவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், எதிர்க்கட்சியாக இருந்த போது ஜெயலலிதா, கருணாநிதியின் குடும்பத்தினரைப் பற்றி பேசியிருக்கிறார். ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு பற்றியும் பேசியுள்ளார்.
ஆனால் தற்போது ஜெயலலிதா செய்வதைப் போல எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடவில்லை. கருணாநிதி மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications