நாளை மறுநாள் கும்பமேளா தொடக்கம்- சுமார் ரூ12 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

Kumbha Mela
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் கும்பமேளாவில் பல லட்சம் சாதுக்களும் பொதுமக்களும் புனித நீராட இருக்கின்றனர்.

கும்பமேளாவையொட்டி அலகாபாத் களைகட்டியிருக்கிறது. சாதுக்களும் யாத்ரீகர்களும் தங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கும்பமேளா திருவிழாவையொட்டி 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புனித நீராடும் பகுதிக்காக 7 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இந்த கும்பமேளாவில் ஜனவரி 14, ஜனவரி 27, பிப்ரவரி 10, பிப்ரவரி 25, மார்ச் 10 ஆகிய நாட்கள் புனித நாட்களாகும். பிப்ரவரி 15-ந் தேதியன்று பசந்த் பஞ்சமி என்பதால் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப் புனித நாட்களில் நீராடினால் தங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் என்பதால் நிர்வாண சாதுக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கூடுவர். இதைப் பார்க்க லட்சக்கணக்கான வெளிநாட்டவரும் வருகை தர உள்ளனர்.

கும்பமேளா திருவிழா மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்க இருக்கிறது. நடப்பு கும்பமேளா மூலமான வர்த்தகத்தில் சுமார் ரூ12 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+