மதுரையில் 500 பவுன் நகையுடன் அடகுக்கடை உரிமையாளர் ஓட்டம்!
மதுரை: மதுரையில் 500 பவுன் நகைகளுடன் அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, உச்சபரம்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். அவர், 'முத்து பைனான்ஸ்' என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக விளம்பரம் செய்தார். இதை நம்பி அவரிடம் சுமார் 400 பேர் 500 பவுன் தங்க நகைகளை அடகு வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் சிலர் தாங்கள் அடகு வைத்த நகையை திருப்ப வந்துள்ளனர். அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்ட லட்சுமணன் நகையை சில நாட்களில் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் கடைக்கு பெரிய பூட்டு போட்டுவிட்டு நகைகளுடன் லட்சுமணன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து அறிந்து நகைகளை அடுகு வைத்தவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊமச்சிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications