குடியரசு தின அணிவகுப்பு: பார்வையாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை

வரும் 26ம் தேதி செங்கோட்டையில் குடியரசு தின அணிவகுப்பு நடக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நம்கியால் வாங்சுக் கலந்து கொள்கிறார். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜ்பாதையில் இருந்து செங்கோட்டை வரை நடக்கும் குடியரசு தின அணிவகுப்பை பார்க்க வருபவர்கள் செல்போன்களை கொண்டு செல்ல டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர். வரும் 29ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா நிறைவு நிகழ்ச்சியைப் பார்க்க வருபவர்களும் செல்போன் பயன்படுத்த முடியாது.
இது குறித்து டெல்லி போலீசார் பல்வேறு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது,
பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தின அணிவகுப்பு மற்றும் நிறைவு விழாவை பார்க்க வரும் அனைவரும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications