இலங்கையில் புதிய போராளிக் குழு உருவெடுக்கும்: சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை

நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இடம்பெற்றுள்ளவை:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சேவின் தாக்குதல் இப்போது சர்வதேச சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக வெடித்திருக்கிறது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் இதைப் பற்றி விசாரனை செய்து கொண்டிருக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் நெடுங்காலமாக பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அதனால் அவர்கள் தமது உரிமைகளைக் கோரினர். அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது தலைமையிலான அரசாங்கம் முயற்சித்தது. தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கக் கூடிய முழுமையான ஒரு கூட்டாட்சியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எனது அமைச்சரவையில் இருந்த ராஜபக்ச மட்டும்தான் கடுமையாக எதிர்த்தார். அவரைப் பொறுத்தவரையில் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதுமட்டுமே இலக்காக இருந்தது.
தற்போது புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர். தமிழர்கள் மீதான எந்த ஒரு தாக்குதலையும் கண்டிக்கின்றனர். இலங்கை அரசாங்கம் இப்படியே செயல்பட்டுக் கொண்டிருந்தால் இலங்கையில் புதிய போராளிக் குழு உருவாது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜ்பக்ச மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அரசுப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இது இலங்கைக்கு கேடு விளைவிக்கும் என்றார் அவர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications