வானமே இடிந்து விழுந்தாலும் பரவாயில்லை..: பாக். பிரதமர் வழக்கில் தலைமை நீதிபதி கொந்தளிப்பு!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: வானமே இடிந்து விழுந்தாலும் பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் மீதான ஊழல் வழக்கின் விசாரணையை விசாரிப்பேன் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி இப்திகார் முகமது செளத்ரி கொந்தளித்திருக்கிறார்.

பாகிஸ்தானின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த போது ராஜபர்வேஸ் அஷ்ரப் உள்ளிட்ட 20 பேர் ஊழல் முறைகேட்டுப் புகாரில் ஈடுபட்டனர் என்பது வழக்கு. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமையன்று விசாரித்தா உச்சநீதிமன்றம், பிரதமர் அஷ்ரப்பை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை நேற்று புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இப்திகார் முகமது செளத்ரி, நீர்மின் திட்ட ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று சிலர் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே குரல் எழுப்புகின்றனர். நாங்கள் நீதிபதிகளாகப் பொறுப்பேற்கின்ற போது சட்டப்படியும் அரசியல் சாசனப்படியும்தான் தீர்ப்பளிப்போம் என்று உறுதியேற்று இருக்கிறோம்.

இந்த வழக்கின் விசாரணை விவரங்கள் பற்றி தெரியாமல் சில அமைச்சர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வானமே இடிந்து விழுந்தாலும் இந்த வழக்கின் விசாரணையை நிறுத்த மாட்டோம் என்று கொந்தளித்தார்.

இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+