12 டி.எம்.சி. நீர் கோரும் தமிழக மனுவை உடனே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

தமிழகத்துக்கான காவிரி நீர் இல்லாமல் குறுவை சாகுபடி பொய்த்தது. சம்பா சாகுபடிக்காகவது உரிய நீரைப் பெற்றுத்தர பலவகைகளிலும் தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனவரி முதல்வாரம் காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜனவரி 31-க்குள் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் இரு மாநிலங்களுக்கான நீர் அளவை காவிரி கண்காணிப்புக் குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 10-ந் தேதியன்று கூடிய காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகம் கோரியபடி நீர் திறந்துவிட உத்தரவிட முடியாது என்று கைவிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்றமோ இதை நிராகரித்து பிப்ரவரி 4-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. இருப்பினும் தமிழக அரசு சார்பில் உடனே விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும் காவிரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான ஜெயின் வரும் 24-ந்தேதி ஓய்வுபெறுகிறார். இதனால் அவருக்கு பதில் புதிய அமர்வு நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெறும். இதனால் நீதிபதி ஜெயின் ஓய்வு பெற்றதும் 26-ந்தேதி குடியரசு தின விடுமுறை வருகிறது. 27-ந்தேதி ஞாயிறு விடுமுறை. ஆகையால் 28-ந் தேதியன்று தமிழக அரசு இது தொடர்பாக புதிய அமர்வில் முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications