நாகர்கோவிலில் நகைக்கடை பூட்டை உடைத்து 2 கிலோ தங்கம் கொள்ளை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நகைக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கல்மட தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். அவர் மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். கடையை அவரது மனைவி செல்வி நிர்வாகித்து வருகிறார். நேற்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் சிலர் நகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் மற்றும் கிரில் கேட் திறந்துகிடந்ததைப் பார்த்தனர்.
இது பற்றி உடனடியாக நாராயணனுக்கு தகவல் தெரிவித்தனர். நாராயணன், செல்வி மற்றும் உறவினர்கள் பதறியடித்து கடைக்கு வந்தனர். கடையை திறந்து பார்த்தபோது கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கோட்டாரு காவல் நிலையத்துக்கு தகவல தெரிவித்தனர். டவுன் டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, சுடலைமுத்து, ராஜசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மோப்ப நாய் ஓரா கொள்ளை நடந்த கடையில் இருந்து அருகில் உள்ள கட்டபொம்மன் சந்திப்பு வரை சென்று திரும்பியது. கடையில் இருந்து மொத்தம் 2 கிலோ தங்க நகைகள் மற்றும் பொருட்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
அவ்வை சண்முகம் சாலை நகைக் கடைகள் நிறைந்த பகுதி. எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும். அதிகாலை 4 மணிக்கெல்லாம் அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் திறக்கப்பட்ட விடும். அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் நடந்த துணிகர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications