சென்னையில் ரூ.5.5 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்; 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வியாசர்பாடியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 5.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய மகாகவி பாரதி நகர் காவல்துறையினர், ஐந்தரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.
இது தொடர்பாக மண்ணடி பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications