மூட்டை பூச்சி, எலிகள் தொல்லை: சேலத்தில் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் இறங்கிய பயணிகள்

Subscribe to Oneindia Tamil

Train
சேலம்: ஏசி உள்ளிட்ட அனைத்துப் பெட்டிகளிலும் மூட்டைப் பூச்சிகளும், எலிகளும் தந்த தொல்லையால் இரவு தூக்கத்தைத் தொலைத்த ரயில் பயணிகள் சேலத்தில் ரயில் நின்றவுடன் ரயில் நிலையத்திலேயே போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி வழியாக குஜராத் மாநிலம் ஓகா நகருக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றிரவு கிளம்பி இன்று காலை 6-45 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தது.

ரயில் வந்து நின்றதும் ஏ.சி. உள்ளிட்ட பிற பெட்டிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் கீழே இறங்கினர்.

ரயிலில் எலி, மூட்டைப் பூச்சிகள் தொல்லை சமாளிக்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், எனவே வேறு கோச்களை தர வேண்டும் என்றும், அதுவரை ரயிலை இயக்க கூடாது என்றும் கோரி ரயில் நிலையத்தில் திடீர் போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து ஸ்டேசன் மாஸ்டர் மற்றும் அதிகாரிகள் வந்து பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பயணிகள் ரயில் புறப்பட்டதில் இருந்தே எலி, மூட்டைப் பூச்சி தொல்லை மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் புகார் செய்து வருகிறோம். அவர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கேட்டனர்.

ஆனால், அதிகாரிகள் சேலத்தில் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் புறப்பட்டு செல்லுங்கள். திருப்பதியில் புதிய கோச் ஒதுக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.

இதையடுத்து 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

திருப்பதியில் என்ன நடந்துச்சோ?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+