2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்: சோனியா நம்பிக்கை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பேசிய சோனியா, நாட்டில் மற்ற கட்சிகளைவிட வலுவான தெளிவான சித்தாந்தம் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தேர்தலின் போது முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுப்போம். ஊழலை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. ஊழல்வாதிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். இதற்காகவே லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டது. ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும். பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடுமையான பொருளாதார நெருக்கடியால்தான் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.வரும் தேர்தலை காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி சமமாக நடத்தும். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாடுகளுடனும் மத்திய அரசு நட்புறவுடன் நடந்து கொள்ளவே விரும்புகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கையைப் பொறுத்தே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications