மும்பை கார்ப்பரேஷன் என்ஜினியரை வெளுத்துக் கட்டிய எம்.என்.எஸ். எம்.எல்.ஏ.!
மும்பை: ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காக கார்ப்பரேஷன் என்ஜினியரை அடித்து துவைத்ததாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் எம்.எல்.ஏ. உட்பட 15 பேர் மீது வழ்ககுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை கார்ப்பரேஷனுக்குட்பட்ட புறநகர் பகுதியான காட்கோபர் வார்டில் துணை என்ஜினியராக பணிபுரிபவர் மகேஷ் பட். இவர் அப்பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீஇரம் காட்டி வந்தார். இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் எம்.எல்.ஏ. ராம் கதம் கடும் எதிர்புத் தெரிவித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும் என்ஜினியர் மகேஷ் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் முனைப்புக் காட்டினார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ கதம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகேஷின் அலுவலகத்தை சூறையாடி அவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ. கதம் மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications