காங்கிரஸ் கட்சியின் 2வது துணைத் தலைவர் ராகுல் காந்தி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 2வது துணைத் தலைவர் என்ற பெருமையை ராகுல் காந்தி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 1998ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவருக்கு முன்பு போல உடல் நலம் இல்லை. நோய் காரணமாக முன்புபோல அவரால் விறுவிறுப்புடன் செயல்பட முடியவில்லை.
இந்த நிலையில் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் முதலில் அவரை அமர்த்தியுள்ளனர்.

அரிய பதவி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் என்றுதான் உள்ளது. துணைத் தலைவர் பதவி என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

முதல் துணைத் தலைவர் அர்ஜூன் சிங்
காங்கிரஸ் கட்சி உருவான காலம் முதல் துணைத் தலைவராக யாரும் நியமிக்கப்பட்டதில்லை. இந்த நிலையில் ராஜீவ் காந்தி தலைவராக இருந்தபோது அதிருப்தியில் இருந்து வந்தவரான அர்ஜூன் சிங்கை சமாதானப்படுத்த அவரை துணைத் தலைவராக்கினார்.

2வது தலைவர் ராகுல் காந்தி
அதன் பிறகு துணைத் தலைவர் பதவியை யாரும் வகித்ததில்லை. தற்போது ராகுல் காந்திக்கு அப்பதவி தரப்பட்டுள்ளது.

அத்தனை பேரும் பின்னுக்கு...
ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதன் மூலம் மன்மோகன் சிங் உள்ளிட்ட அத்தனை பேரும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications