ராகுலுக்காவது முழு சுதந்திரம் கொடுங்கப்பா.. ஈவிகேஎஸ் வேண்டுகோள்!

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை கோஷ்டி பூசல் நிறைந்த தமிழக காங்கிரஸ் ஒருமனதாக வரவேற்றுள்ளது. அவர் கட்சியில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என்று அது எதிர்பார்க்கிறது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் ஜெய்பூரில் இருந்து தொலைபேசியில் கூறுகையில், சோனியா காந்தி மற்றும் ராகுல்ஜி தற்போது ஒன்றாக உட்கார்ந்து லோக்சபா தேர்தல் குறித்து வியூகம் வகுப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு ராகுல் புதிய அணியை உருவாக்குவார் என்று நம்புகிறேன். பெரும் மாற்றத்தை ஏற்படுத்த அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்றார்.
மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராகுல் ஏற்கனவே இளைஞர் காங்கிரஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதே போன்று அவர் காங்கிரஸிலும் மாற்றத்தை ஏற்படுத்துவார். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது. ஆனால் யாரை வேட்பாளர் ஆக்குவது என்பதை முடிவு செய்வதில் காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான விடியல் சேகர் கூறுகையில், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ராகுல் காந்தி மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications