பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதால் நிறுத்தப்பட்டிருந்த ரயில்சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
பாம்பன் ரயில் பாலத்தின் தூணில் கப்பல் மோதியதால் கடந்த 6 நாட்களாக ராமேஸ்வரத்துக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பாம்பன் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனிடையே ரயில்வே பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் பாலத்தை சீரமைத்து ரயில் என்ஜினை இயக்கி பரிசோதித்தனர். பின்னர் 21 காலி பெட்டிகளுடன் ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று முதல் பகல் நேர ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் புவனேஸ்வர் ரயில் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இரவு 7 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ராமேஸ்வரம் வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். இரண்டு நாட்களுக்குப் பின்னர் ராமேஸ்வரத்திற்கு இரவு நேர ரயில் போக்குவரத்து தொடங்கக் கூடும் எனத் தெரிவிகிறது.












Click it and Unblock the Notifications