மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகும் கல்யாண் சிங்!

Subscribe to Oneindia Tamil

Kalyan Singh
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இன்று இணைய இருக்கிறார் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த கல்யாண்சிங் கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து வெளியேறினார். பின்னர் 5 ஆண்டுகள் கழித்து 2004-ம் ஆண்டு பாஜகவில் மீண்டும் இணைந்தார். அடுத்த லோக்சபா தேர்தலின் போது 2009-ம் ஆண்டு தமது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாததை எதிர்த்து மீண்டும் பாஜகவில் இருந்து வெளியேறினார். சமாஜ்வாடி கட்சியுடன் அவர் ஐக்கியமானார். முலாயம்சிங் அமைச்சரவையில் தமது மகனை அமைச்சராக்கியும் பார்த்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டு ஜன் கிராந்தி கட்சியை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று லக்னோவில் தங்களது திராணியைக் காட்ட மிகப் பிரம்மாண்டமான பேரணியை பாரதிய ஜனதா கட்சி நடத்த இருக்கிறது. இந்தப் பேரணியைப் பார்வையிட பாஜக தலைவர் நிதின் கத்காரி, வருண் காந்தி, முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா, ராஜ்நாத் சிங் என பெரும் பட்டாளமே வருகிறது. இந்தப் பேரணியின் போது கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகவில் சேருவதும் தேர்தல் முடிந்த பின்னர் விலகிவிடுவதும்தான் கல்யாண்சிங்கின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+