ஆர்.எஸ்.எஸ்., பாஜக முகாம்களில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயிற்சி: ஷிண்டே புது குண்டு!

காவி தீவிரவாத பயிற்சி
இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து:
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்துவா தீவிரவாத்தை உருவாக்குகின்றன. சில குண்டு வெடிப்பு சம்பவங்களின் விசாரணைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களது முகாம்களில் பயிற்சி இந்துத்துவா தீவிரவாதத்திற்கு பயிற்சி அளித்து வருகின்றன. சமாஜ்வுதா எக்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்பது ஷிண்டேயின் கருத்து.
பாஜக கண்டனம்
சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், உள்துறை அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. இந்த பேச்சு மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு நாங்கள் பெரிதும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.
ஹபீஸ் சையத்துக்கு கிடைத்தது ஆயுதம்!:
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் தெரிவித்த கருத்தை லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையத் ஆதரித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத், இந்திய உள்துறை அமைச்சர் இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications