பிஎஸ்என்எல் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 பாக்கி... கேஸ் போட்டு வசூலிக்க முடிவு
சென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் லேன்ட்லைன் இணைப்புகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள ரூ. 10 கோடி தொலைபேசிக் கட்டணத்தை வசூலிக்க வழக்குத் தொடர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
வழக்குப் போட்டு இந்தப் பணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக நிறுவன செய்தித் தொடர்பாளர் விஜயா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 மாதமாக பில் தொகை கட்டாத டெலிபோன், பிராட் பேண்ட் இன்டர்நெட் சந்தாதாரர்களுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. நோட்டீசை கையில் வாங்காதவர்களின் வீட்டின் கதவு மற்றும் சுவர் மீது ஒட்டப்படுகிறது.
இந்த நோட்டீஸ் கொடுத்த ஒரு வாரத்திற்குள் பில் பாக்கித் தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகும் செலுத்தாத வாடிக்கையாளர்கள் மீது கோர்ட் மூலம் வழக்கு தொடரப்படும். போலீஸ் உதவியுடன் பாக்கித் தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications