'இந்து தீவிரவாதம்' என்பது சரியல்ல, 'சங் பயங்கரவாதம்' என்பதே சரி: திக்விஜய் சிங்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் பேசிய சுஷில்குமார் ஷிண்டே, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் இந்து தீவிரவாதத்துக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதன் விளைவுவதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி, மலேகான் குண்டுவெடிப்புகள் என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷிண்டேயை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஷிண்டேயை பதவி நீக்கம் செய்யக் கோரி நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கும் பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த திக்விஜய் சிங், உள்துறை அமைச்சர் 'இந்து தீவிரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்குப் பதிலாக 'சங் பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். பயன்படுத்தப்பட்ட சொல்லில்தான் தவறே தவிர அவர் சொன்ன கருத்தில் எந்தத் தப்பும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications