டாஸ்மாக் கடையை ஏன் மாத்துனீங்க.. மகள்களுடன் உண்ணாவிரதத்தில் குதித்த எம்.எல்.ஏவின் மாமியார்
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் டாஸ்மாக் மதுக் கடையை யாரைக் கேட்டு மாற்றினீர்கள் என்று கேட்டு தேமுதிக எம்.எல்.ஏவின் மாமியார் தனது மகள்களுடன் உண்ணாவிரதத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுக் கடைகளை மூட வேண்டும் என்று கோரி பாமகவினர் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகளும் போராடி வருகின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே வைக்கப்படும் கடைகளை அகற்றக் கோரியும் போராட்டங்கள் நடந்தபடி உள்ளன.
இந்த நிலையில், யாரைக் கேட்டு டாஸ்மாக் கடையை எங்களது பகுதியிலிருந்து மாற்றினீர்கள் என்று கேட்டு ஒரு போராட்டம் பல்லடத்தில் நடந்துள்ளது. இதில் ஈடுபட்டது 3 பெண்கள். அதுவும், தேமுதிக எம்.எல்.ஏவின் மாமியார் மற்றும் மச்சினிகள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தினகரன். இவரது மாமியார் சரஸ்வதி. இவர் தனது மகள்கள் திவ்யபாரதி மற்றும் தனுசியா ஆகியோருடன் பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
தங்களது பகுதியிலிருந்து டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ததைதக் கண்டிப்பதாக கூறிய சரஸ்வதி, அதிமுகவினரின் தூண்டுதலே இந்த கடை மாற்றத்துக்குக் காரணம் என்றும், மீண்டும் கடையை தங்களது பகுதிக்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரியபடி கோஷமிட்டதால் பரபரப்பாகி விட்டது தாசில்தார் அலுவலக வளாகத்தில்.
-
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications