சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி… 5பேர் உடல் கருகியது
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 5 படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி. இங்கு சங்கரேஸ்வரி (வயது 50) என்பவருக்கு சொந்தமான வினோதா பட்டாசு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஆலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட அறைகளில் தனித்தனியாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆறையில் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் உள்பட 6 பேர் பேன்சி வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட உராய்வில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பிடித்தது. இதில் பட்டாசுகள் வெடித்து இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த சம்பவத்தில் செல்வராஜ் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் உடல் கருகினார். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவ விடாமல் தடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications